குவைத் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஊடகங்களின் பொது நிர்வாகம் மத்திய சிறையில் உள்ள கைதிகளில் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக மரணித்துள்ளதாக அறிவித்துள்ளது.
பெண் கைதியான 59 வயதான அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் முதலில் தெரிவித்தது.
மேலும், அவருக்கு மற்ற சிக்கல்கள் மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், இந்த மாதம் 15ஆம் தேதி அல்-ஃபர்வானியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், ஆனால் அவர் மருத்துவமனையில் நுழைந்த 7 நாட்களுக்குப் பிறகு திங்கள்கிழமை (ஜூன் 22) காலமானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை, தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0
Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr
Twitter : https://twitter.com/kuwaittms?s=08