குவைத்தின் Hawalli பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வசித்து வந்த 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து சுகாதார அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் அந்த கட்டிடத்தில் வசிப்பவர்களை தனிமைப்படுத்தியது.
மேலும், வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 11 பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் வெளிநாட்டினார்கள் என்றும், அமைச்சகத்தின் குழுக்கள் 5 மாடிகளைக் கொண்ட அந்த கட்டிடத்தின் குடியிருப்பாளர்களை தனிமைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கட்டிடத்தில் உள்ளவர்களின் அனைத்து தேவைகளும் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முழுவதும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.