குவைத்தில் ஃபர்வானியா கிளையின் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) அதிகாரிகள் அடையாளம் தெரியாத நபர் ஆர்தியாவில் உள்ள வளாகத்தில் உள்ளூர் வங்கி ATM-மில் திருட முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளாகத்தின் அருகே நிறுவப்பட்ட CCTV கேமராக்கள் சந்தேக நபரின் படங்களை எடுத்துள்ளன, ஆனால் அந்த நபர் முகமூடி அணிந்திருப்பதால் சந்தேக நபரின் அடையாளம் மற்றும் வயதை அறிந்து கொள்வது கடினம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவியல் சான்றுகள் துறையைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியிலிருந்து கைரேகைகளை எடுத்துள்ளனர்.
அந்த சந்தேகநபர் ATM-மின் முன் பகுதியை உடைக்க முயன்றதாக கூறப்படுகிறது, ஆனால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை.
பாதுகாப்பு வட்டாரத்தின்படி, உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட அலாரம் சிஸ்டம் முடக்கப்பட்டது, உடனடியாக பாதுகாப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், ஆனால் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்தன.