மார்ச் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆர்டிகல் 18 வசிப்பிடங்களுக்கான ஆன்லைனில் புதுப்பிக்கும் புதிய சேவையைத் தொடங்க தனது துறை தயாராகி வருவதாக உள்துறை அமைச்சக வசிப்பிட விவகாரங்களுக்கான உதவி செயலாளர் மேஜ் ஜெனரல் தலால் மராபி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் ஆர்டிகல் 18 வசிப்பிடங்களை எவ்வாறு புதுப்பிப்பது என்பது பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நிறுவனத்தின் பிரதிநிதிகள் நிறுவனத்திடமிருந்து விண்ணப்ப படிவம், ஒருங்கிணைந்த எண் மற்றும் email ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஆர்டிகல் 17 வசிப்பிடங்கள் அடுத்து ஆன்லைனில் தொடங்கப்படும் என்றும், இகாமா விவகார இயக்குநரகம் அனைத்து அமைச்சகங்களுடனும் இணைக்கப்படும் என்றும் மராபி தெரிவித்தார்.
source : kuwait times