குவைத்தில் உள்ள Tvstravels & Cargo நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Al Jazeera Airways-ன் சிறப்பு விமானம் (Chartered) விமானம் இன்று அதிகாலை 1:25 மணியளவில் குவைத் விமான நிலையத்தில் உள்ள Al Jazeera முனையத்தில் இருந்து 165 பயணிகளுடன் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் புறப்பட்டது.
இந்த விமானம் இந்திய நேரப்படி காலை 9 :00 மணிக்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
குவைத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் முதல் Chartered விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை திருச்சிராப்பள்ளி விமான நிலைய அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு விமானத்தில் பயணம் செய்த அனைவரையும் டிவிஎஸ் ஹைதர் குழுமம் நிறுவனர் டாக்டர் SM ஹைதர் அலி அவர்கள், நேரடியாக விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0
Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr
Twitter : https://twitter.com/kuwaittms?s=08