கொரோனா வைரஸ் போராட்டத்தில் தங்களை அர்ப்பணிக்க இந்தியாவிலிருந்து 650 செவிலியர்கள் குவைத் வருகை..!!

650 stranded indian nurses to return to kuwait. (photo : KuwaitLocal)

இந்தியாவிலிருந்து 350 ஆண், பெண் செவிலியர்கள் இன்று குவைத்திற்கு வருவார்கள் மற்றும் 300 பேர் நாளை (ஜூன் 13) வருவார்கள் என்று சுகாதார அமைச்சர் Dr. பாசெல் அல் சபா மற்றும் செயலாளர் Dr. மொஸ்டபா ரெடா ஆகியோரின் அறிவுறுத்தல்களின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 நோயாளிகளுக்கு இயங்கும் பொது மற்றும் கள மருத்துவமனைகளின் தேவைகளுக்கு ஏற்ப இந்த செவிலியர்கள் சுகாதார வசதிகளில் பணியாற்றுவார்கள் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சகம் அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஜாபர் அல் அஹ்மத்தில் வீட்டுவசதி வழங்கும், அவர்களை சோதனை செய்து முடிவுகள் வந்தவுடன் அவர்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்புதான் செவிலியர்கள் திரும்பி வர வழிவகுத்தது, நெருக்கடிக்கு முன்னர் செவிலியர்கள் குவைத்தை விட்டு வெளியேறி தங்கள் நாடுகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.