எகிப்திய வெளிநாட்டினரை வெளியேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, எகிப்து விமான நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் எகிப்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை காலை தனது நான்காவது வெளியேற்றத்தை நடத்தியது.
குடும்பம், வணிகம், சுற்றுலா வருகை போன்ற விசாவில் வந்தவர்கள் மற்றும் மனிதாபிமான வழக்குகளுடன் குவைத்துக்குச் சென்ற 303 எகிப்திய வெளிநாட்டினர்கள் புறப்படுவதற்காக இருந்தனர்.
மேலும், இதில் குடியிருப்புச் சட்டத்தை மீறியதால் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட இருந்த 25 எகிப்தியர்களும் இருந்தனர்.
தற்போது, குவைத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மொத்த எகிப்தியர்களின் எண்ணிக்கை 1,293 நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.