குவைத்தில் கூடுதலாக இரண்டு வாரங்கள் பள்ளிகளுக்கு விடுமுறையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
COVID-19 என்னும் கொரோனா வைரஸ் பரவலை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தில் இன்று, பள்ளிகளுக்கு விடுமுறையை கூடுதல் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
எனவே அனைத்து பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், ராணுவ கல்லூரிகள், எண்டோவ்மென்ட் மையங்கள் மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் மார்ச் 26 வரை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Arab Times