குவைத்தின் சல்வா பகுதியில் இந்திய ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
குவைத்தின் சல்வா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்த இந்திய ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தினசரி நாளிதழ் நேற்று (அக்டோபர் 22) செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!
மேலும், இவர் 1988ல் பிறந்தவர் என்றம், கூடுதல் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு ஓட்டுநர் அவருடைய அறைக்குள் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கியது கண்டு உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்த, சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும், அங்கு அதிகாரிகள் நடத்திய தடயவியல் ஆதாரங்கள் அடிப்படையில் முதல்கட்டமாக தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!
இதேபோன்று, குவைத்தின் அஹமதி பகுதியில் 1969 ல் பிறந்த பங்களாதேஷை சேர்ந்த ஒருவர் தற்கொலை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் உள்ளவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.