குவைத்தில் இந்தியாவை சேர்ந்த சிறுவன் நேற்று (அக்டோபர் 9) வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கி பலியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தின் மஹபூல்லா பகுதியின் அருகே உள்ள கடற்கரைக்கு இந்த இந்தியாவை சேர்ந்த சிறுவன் நண்பர்களுடன் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!
சிறுவனின் பெயர் முஹம்மத் இர்பான் (14) என்றும், இர்பான் மங்காஃப் பகுதியில் உள்ள இந்திய சர்வதேச பள்ளியின் மாணவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுவன் நண்பர்களுடன் கடற்கரைக்கு குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்தியாஸ் மற்றும் நசீமா தம்பதியினரின் மகன் இர்பான்.
இவர்கள் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.