குவைத்தில் பகுதி ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடித்ததால், ஜூலை 21, நேற்று ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக ஒருவர் மீது கூட பதிவு செய்யப்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பகுதி ஊரடங்கு உத்தரவு மற்றும் வீட்டுத் தனிமைப்படுத்தலைக் கடைப்பிடிப்பதற்கான அர்ப்பணிப்புக்காக நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரவு 8:00 மணி முதல் காலை 5:00 மணி வரை செயல்படுத்தப்படும் பகுதி தடையை மீறக்கூடாது என்று அமைச்சகம் அனைவரையும் கேட்டுக்கொண்டது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms