கொரோனா வைரஸிலிருந்து மேலும் 250 நபர்கள் குணமடைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 17) தெரிவித்துள்ளார்.
தற்போது, குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,093ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இரண்டு நாட்களுக்குள் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்புவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.