குவைத் உள்துறை அமைச்சகம் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு புதிய ஊரடங்கு உத்தரவு நேரங்களை கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், இது ரமலான் மாதத்தின் முதல் நாளான இன்று (24.04.2020) வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஊரடங்கு மாலை 4:00 மணி முதல் காலை 8:00 மணி வரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.