ஜஹ்ரா (Jahra) சாலை அருகே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவைத்: முதல் பருவத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லை!
எரிபொருளைக் நிரப்பி கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஒரு டேங்கரை தொழிலாளர்கள் வெல்டிங் செய்யும் போது இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஜஹ்ரா சாலை பாலத்தில் மோதுவதற்கு முன் 30 மீட்டர் தொலைவில் லாரி வெடித்தது.
இந்த சம்பவத்தில் அரபு மற்றும் ஆசிய நாட்டை சேர்ந்த இரு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மூன்றாவது தொழிலாளி வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட காயங்களுடன் சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குவைத் தீயணைப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் சிக்கியுள்ள 54 சதவீத ஆசிரியர்களின் தேவை இல்லை – கல்வி அமைச்சகம்!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.