குவைத்தில் இன்று (23.03.2020) முதல் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்திய தூதரகத்தின் சேவை நேரத்தில் மாற்றங்கள் செய்து சற்றுமுன் இந்திய தூதரக அதிகாரிகளால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட வேலை நேரம் குறித்த விவரம் :
1) இந்திய தூதரகத்தின் வேலை நேரம் காலை 8 முதல் மதியம் 3 வரையில் மாற்றப்பட்டுள்ளது.
2) கிளை அலுவலகங்களின் வேலை நேரம் காலை 08 முதல் மதியம் 12 வரையில் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இது நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.