குவைத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அல்-ராய் தினசரி தெரிவித்துள்ளது.
மேலும், அவர்கள் மீது ஆள்மாறாட்டம் மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதியான அல்-ஜோர் மின் நிலையத்திற்குள் நுழைய முயற்சித்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபர்கள் தங்களுக்கு சொந்தமில்லாத நுழைவு அனுமதிகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள் இருவரின் கைகளில் அவர்களுக்கு சொந்தமில்லாத நுழைவு அனுமதிகள் எவ்வாறு வந்தது என்பதை அறிய அதன் உரிமையாளர்கள் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.