குவைத்தில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய நபரை கைது செய்ய உத்தரவு..!!

Traffic police near the reckless motorist car. (photo : Arab Times)

உள்துறை அமைச்சகத்தின் செயல்பாட்டு மற்றும் போக்குவரத்து விவகாரங்களுக்கான உதவி துணை செயலாளர் மேஜர் ஜெனரல் ஜமால் அல் சயீக் அவர்கள் இஷ்பிலியா மற்றும் ரிஹாப் பகுதிகளுக்கு இடையே பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய அடையாளம் தெரியாத நபரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக அல்-அன்பா தினசரி தெரிவித்துள்ளது.

மேலும், அந்த நபர் வெள்ளை நிற vanette-ஐ ஓட்டி வந்ததாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது, குறிப்பாக முழு தேசமும் வைரஸை எதிர்த்துப் போராடும் நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

source : Arab Times