குவைத்தில் ஜனவரி 2 ,2020 முதல் பிப்ரவரி 29 வரை காலாவதியான குடியிருப்பு உள்ள நபர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை எந்தவிதமான அபராதமும் இன்றி செல்லுபடியாகும் என்று உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள குடியிருப்பு விவகாரங்களின் பொது நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், ஜனவரி 1 அல்லது அதற்கு முன்னர் தங்களது குடியிருப்பு காலாவதி ஆகியிருந்தகால் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றும், அவர்கள் குடியிருப்பு புதுப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், பிடிபட்டால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் துறையில் உள்ள தொழிலாளர்கள், ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள், பிரிவு 23 வைத்திருப்பவர்கள் மற்றும் சுய ஆதரவாளர்களுக்கு (self sponsor) (பிரிவு 17, 20, 22, 23, 24) ஒரு வருடத்திற்கு மட்டுமே குடியிருப்பு அனுமதி புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0
Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr
Twitter : https://twitter.com/kuwaittms?s=08