குவைத்தில் ரமலான் சம்பந்தப்பட்ட நடைமுறைகள் இடைநிறுத்தம்..!!

Ramadan activities suspended due to coronavirus.

கொரோனா வைரஸ் பரவிவருவதன் காரணமாக இந்த ஆண்டுக்கான ரமலான் சம்பந்தப்பட்ட நடைமுறைகளை அமைச்சகம் நிறுத்தியுள்ளதாக அவ்காஃப் அமைச்சகத்தின் கலாச்சார விவகாரங்களுக்கான உதவி மற்றும் இஸ்லாமிய விவகார செயலாளர் Dawood Al-Asousi தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய், ஆயிரக்கணக்கான நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளுடன் தொடர்ந்து பரவிவருவதால் இந்த ஆண்டுக்கான ரமலான் சம்பந்தப்பட்ட நடைமுறைகளை நிறுத்தியுள்ளதாக என்று அல்-ராய் தினசரி தெரிவித்துள்ளது.

குவைத் கிராண்ட் மசூதியில் ரமலானின் கடைசி 10 நாட்களுக்கான பிரார்த்தனையை நடத்துவதற்கான முடிவை தற்போதைய நெருக்கடி முடியும் வரை இடைநிறுத்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.