குவைத் சிவில் தகவலுக்கான பொது ஆணையம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குவைத் குடிமக்கள், ஜி.சி.சி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்காக சேவை நேரத்தை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும், பீடோவன் மக்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பிரதான கட்டிடமான தெற்கு சுர்ராவில் சேவைகள் கிடைக்கும் என்று சிவில் தகவல் பொது ஆணையம் அறிவித்தது.
இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!
சிவில் அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்காக, அனைத்து குவைத் மற்றும் வெளிநாட்டினருக்கும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அதிகாரம் வழக்கம்போல அட்டைகளை வழங்கி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தின் வலைத்தளம் www.paci.gov.kw வழியாக ஆன்லைனில் தங்கள் பரிவர்த்தனைகளை முடிக்குமாறு குவைத்திகள் மற்றும் வெளிநாட்டினருக்கு அதிகாரம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!
மேலும், வருகைக்கான சந்திப்பை முன்பதிவு செய்யுமாறும் மற்றும் முன் சந்திப்பு அறிக்கைகள் இல்லாதவர்களுக்கு எந்த பரிவர்த்தனையும் முடிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் அனைவருமே சமூக விலகல் மற்றும் முகமூடி அணிவது போன்ற சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.