குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது, குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 189ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கொரோனா வைரஸிலிருந்து 30 பேர் குணமடைந்துள்ளதாகவும் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் 5 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.