குவைத்தில் நடப்பு கல்வியாண்டின் (2020-2021) முதல் பருவத்தில் காகிதம் அல்லது ஆன்லைன் தேர்வுகள் இருக்காது.
இதனை குவைத்தின் கல்வி அமைச்சகம் அறிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டில் சிக்கியுள்ள 54 சதவீத ஆசிரியர்களின் தேவை இல்லை – கல்வி அமைச்சகம்!
அமைச்சின் செயல் துணை செயலாளர் பைசல் அல் மக்சீத் (Faisal Al Maqseed), அமைச்சக அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினார்.
அதன் பின்னர் அறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளுக்கும் கற்பித்தல் ஆன்லைனில் தொடரும் என்று கூறினார்.
மேலும், மாணவர்களின் நிலைகளை மதிப்பிடும் முறை குறித்து பல திட்டங்கள் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் குறிப்பாக நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தில் தேர்வுகள் இருக்காது என்று அவர் கூறினார்.
குவைத்தில் பாதுகாப்பு விதிகளை மீறிய 32 கிடங்குகள் மூடல்!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.