Covid-19; குவைத்தில் Random சோதனையை தொடங்கியது MOH..!!

MoH begin random Covid test from home. (photo : IIK)

குவைத் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு குழுக்கள் Random கணக்கெடுப்பு மற்றும் சோதனையை செயல்படுத்தத் தொடங்கியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

MoH-இன் படி, பொது சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஒரு குழு, நாட்டின் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒரு வீட்டிலிருந்து ஒரு மாதிரியை ஆய்வு செய்து எடுக்கும். அவர்கள் வீட்டிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர் அல்லது அவள் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதைச் சோதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழு மாலை 5:00 மணி முதல் 11:00 மணி வரை குடியிருப்பு பகுதிகளுக்கு வருகை தரும் என்றும், ஒரு நாளில் 250 வீடுகளைப் பார்வையிடும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த குழு நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை சோதனை நடத்துவதை இலக்காக கொன்றுள்ளது என்று MoH தெரிவித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08