குவைத் இந்திய தூதரகம் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு இந்தியர்கள் பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், உங்களுக்கு கொரோனா தொடர்பான நோய்தொற்று இருப்பதாக சந்தேகம் இருந்தால் உடனடியாக 151ஐ அழையுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்ற அனைத்து வகையான அவசரகால உதவிகளுக்கும் 112ஐ அழைக்கவும் இந்திய தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
முக்கியமாக, பல்வேறு நோய்கள் காரணமாக தொடர்ந்து மருந்துகள் சாப்பிடும் நபர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களுக்கு இந்த நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இருந்தால் தற்போது இருக்கும் இடத்தில் இருந்தபடியே எப்படி தீர்வு காணமுடியும் என்பதற்கு இந்த அறிவிப்பு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.