ஐக்கிய அரபு நாட்டின் கார்னிச் என்ற தெருவுக்கு குவைத்தின் மறைந்த அமீர் ஷேக் சபா அவர்களின் நினைவாக அவரின் பெயரை மாற்றம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!
ஐக்கிய அரபு நாடுகளில் அமைந்துள்ள கார்னிச் என்ற தெருவுக்கு மறைந்த குவைத் அமீர் ஷேக் சபா அவர்களின் பெயரை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளின் உச்சசபை உறுப்பினரும் மற்றும் உம் அல்-குவைன் ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் ரஷீத் அல்-முல்லா அவர்களும் நேற்று (அக்டோபர் 01) வியாழக்கிழமை அன்று கார்னிச் தெருவுக்கு மறைந்த குவைத் அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபா அவர்களின் பெயரை வைக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!
இதனை தொடர்ந்து, மறைந்த அமீர் ஷேக் சபா அவர்களை கெளரவிக்கும் விதமாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குவைத்திற்கும் ஐக்கிய அரபு நாட்டிற்கும் இடையிலான பிரச்சனைகளை அமீர் ஷேக் சபா அவர்கள் சரிசெய்துள்ளார் என்ற சமாதானத்திற்காகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.