குவைத் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை (ஜூலை 23) அன்று அரசாங்கத்தால் நடத்தப்படும் அனைத்து மருத்துவமனைகளும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் கண்டறியும் சோதனைகளை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.
குவைத்தில் தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சியாக சுகாதார வழிகாட்டுதலுக்கு இணங்க இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, PCR சோதனைகளை நடத்தும் அனைத்து மருத்துவ வசதிகளும் முறையாக அங்கீகாரம் பெற்றுள்ளன என்றும், ஏழு ஆய்வகங்கள் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்தன, அவற்றில் ஒன்று இதுவரை சான்றிதழ் பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms