குவைத்தில் வீட்டு வேலை செய்யும் 51 வயதுடைய பணிப்பெண் ஒருவர் குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள சபா அல் நசீர் பகுதியில் இந்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!
இந்த பெண் குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட இந்த பெண் பிலிபைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்.
மேலும், இந்த பெண் தனக்கு COVID-19 நோய்தொற்று இருப்பது உறுதியானதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்று காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை இவரின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.