கடுமையான உடல்நிலை பாதிப்பு காரணமாக வீடுகளை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 20 மொபைல் பிரிவுகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடக இயக்குநர் டாக்டர் கடா இப்ராஹிம் (Dr Ghada Ibrahim) அறிவித்துள்ளார் என்று Al Jarida தெரிவித்துள்ளது.
குவைத் நெடுஞ்சாலையில் இந்தியப் பெண் இறந்த நிலையில் கண்டெடுப்பு!
இடம் விட்டு இடம் செல்லக்கூடிய மொபைல் தடுப்பூசி பிரிவுகள், படுக்கையில் இருப்பவர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் மற்றும் கடுமையான நோய் உள்ளவர்களை இலக்காக கொண்டுள்ளது.
மேலும், Al Mishref fairgroundஇல் உள்ள தடுப்பூசி தலைமையகத்திற்கு அவர்கள் பயணிக்க தேவையில்லை என்றும் இப்ராஹிம் செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
குவைத்திலிருந்து கூடுதலான இந்திய நகரங்களுக்கு விமானங்கள்!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.