குவைத்தில் வசிக்கக்கூடிய மக்கள் மாதத்திற்கு 17.8KD மில்லியன் தினார்கள் பொருளாதார இழப்பால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஹோட்டல் உரிமையாளர்களின் சங்கத் தலைவர் காசி அல்-நபிசி அவர்கள் அல்-அன்பா தினசரி செய்தித்தாளில் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, கொரோனா தொற்றுக் காரணமாக சுற்றுலாத் தளங்களும் முற்றிலுமாக முடங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!
குவைத்தில் கொரோனா காரணமாக ஹோட்டல்கள் இயங்காததால் 60 சதவீதமான உணவகங்கள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இரண்டாவது முழு ஊரடங்கு குறித்த செய்தி பரவி வருவதால் இனி வரும் காலங்களில் ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாவதாக அல்-நபிசி தெரிவித்துள்ளார்.
ஹோட்டல்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பதால் மக்கள் ஹோட்டல்களை முன்பதிவு செய்ய தயங்குகின்றனர்.
இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!
மேலும், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் பொருளாதார நெருக்கடியால் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது போன்ற பாதிப்புகள் ஹோட்டல்களுக்கு மட்டுமல்ல உணவு, போக்குவரத்து, கட்டுமானம் போன்ற பல்வேறு தொழிள்களுக்கு ஏற்படுகிறது என்று அல்-நபிசி சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.