குவைத்தில் கொரோனா தொற்றின் காரணமாக விமான சேவையை சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் நிறுத்தி வைத்திருந்தது.
இந்தியா, எகிப்து, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் உட்பட 34 நாடுகளுக்கு விமான சேவையை தடை விதித்திருந்தது.
இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!
இந்த பயணத் தடை காரணமாக வெளிநாடுகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக பயணத் தடையை நீக்கப் பரிந்துரைத்துள்ளதாக குவைத் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாட்டுத்துறை இயக்குநர் சலேஹ் அல்-ஃபதகி அரபு செய்தித்தாளில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!
மேலும், குவைத்திற்கு தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள நாட்டிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பயண தடையை நீக்க சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம், உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகத்தின் ஒத்துழைப்பு வேண்டும் என்று அல்-ஃபதகி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.