குவைத்தின் அமீர் ஷேக் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா அவர்களை ஐக்கிய நாடுகள் சபை ‘மனிதாபிமான தலைவர்’ என்ற புகழ்பெற்ற பட்டத்துடன் கவுரவித்து ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 9, 2014 அன்று, அந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இருந்த பான் கீ மூன் அவர்கள் குவைத் அமீரை ஒரு ‘உலகளாவிய மனிதாபிமான தலைவர்’ என்ற பட்டத்துடன் கவுரவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் தேவைப்படும் மக்களுக்கு குவைத் நாடு உதவிகளை வழங்கியுள்ளதால், அமீர் அவர்கள் குவைத்தை மனிதாபிமான துறையில் ஒரு முன்னணி நாடாக நிலைநிறுத்தியுள்ளது.
இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!
ஆறு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், குவைத்தின் வெளியுறவு மந்திரி ஷேக் அஹ்மத் நாசர் முகமது அல் சபா ஒரு செய்திக்குறிப்பில்,
இந்த அங்கீகாரம் குவைத்தின் முன்னணி பரோபகார நிலையை பிரதிபலிக்கிறது என்றும், இந்த நிகழ்வில் அமீர் அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவிப்பதாக அவர் கூறினார்.
குவைத்தில் ஐக்கிய நாடுகளின் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர் Dr. தாரிக் அல் ஷேக் அவர்கள் அமீரை வாழ்த்தினார்.
மேலும் அமீரின் இராஜதந்திர மற்றும் மனிதாபிமான அணுகுமுறையும் அமைதிக்கான அர்ப்பணிப்பும் குவைத்துக்கு உள்நாட்டிலும் வெளிப்புறத்திலும் ஒரு மூலோபாய தேர்வாகும் என்று தெரிவித்தார்.
ஆறு ஆண்டு நிறைவை முன்னிட்டு அரசாங்க உயர் அதிகாரிகள் அமீருக்கு வாழ்த்து தெரிவித்தாலும், அவர் தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையில் உள்ளதால் விரைவாக குணமடைய வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர்.
இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!
அமைச்சர்களின் அமைச்சரவையின்படி, அமீரின் உடல்நிலை சீராகவும், மேம்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம், ஷேக் சபா குவைத்தில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த பின்னர், சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.