குவைத்தின் மறைந்த அமீருக்கு அஞ்சலி செலுத்திய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த அமீர்.
குவைத்தின் மறைந்த அமீர் ஷேக் சபா அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய உலக தலைவர்களுக்கு அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் நேற்று (அக்டோபர் 05) திங்கட்கிழமை நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!
மறைந்த அமீருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் அரபு நாடுகளின் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை குவைத்திற்கு கடிதம் மற்றும் வருகை மூலமாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபை, அரபு லீக், இஸ்லாமிய மாநாட்டின் அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், FAO போன்ற
அமைப்புகளும் மனமார்ந்த வறுத்தத்தை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!
இதனை தொடர்ந்து, ஐ.நா சபை மற்றும் அரபு லீக்கின் கீழ் செயல்படும் ஏஜென்சிகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.