COVID-19; குவைத்தில் இந்திய செவிலியர் ஒருவர் கொரோனா காரணமாக சிக்கிசை பலனின்றி மரணம்..!!

Keralite nurse dies of COVID-19 in Kuwait. (photo : mathurubhumi)

குவைத்தில் வேலை செய்து வந்த இந்தியாவைச் சேர்ந்த கேரளா மாநிலம் ஆலப்புழா அடுத்த மாவேலிக்கரை பகுதியைச் சேர்ந்த செவிலியர் அன்னம்மா (58) இன்று (மே 24) பிற்பகல் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இவர் குவைத்தின் Mubarak பகுதிகளில் உள்ள Al-Shabab Medical Center-ல் தலைமை செவிலியராக சேவை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மூன்று நாட்களாக Al-Kabir மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது தெரியவந்துள்ளது.

இவருடைய கணவர் பெயர் சாக்கோ(மறைந்த) என்பதாகும். இந்த தம்பதிகளுக்கு ஆண் மற்றும் பெண் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் குவைத்தில் உள்ளனர், covid புரோட்டோ-கால் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு உடல் குவைத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.