குவைத் Kabd பகுதியில் உள்ள தச்சுப் பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தின் Kabd பகுதியில் இயக்கி வருகின்ற ஒரு தச்சுப் பட்டறையில் இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!
மேலும், சம்பவம் நடந்த அந்த பகுதியில் மரம், சாயங்கள் மற்றும் தட்டச்சு தொடர்பான பல பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைவாக தீயணைப்பு வீரரங்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kabd, Jalib Al-Shuyukh மற்றும் Al-Asnad ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தீ அதிஷ்டவசமாக அருகாமையில் இருந்த கட்டிடங்களுக்கு பரவவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்தில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெரும் அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.