குவைத்தில் நோயாளியாக இருந்த இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அமிரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார், ஆனால் அவர் மருத்துவமனைக்கு வந்த ஓர் சில நேரத்தில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை, ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளியுடன் தொடர்பு கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட கட்டிடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவருக்கு கடுமையான மார்பு வலி இருந்ததாகவும், அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் பின்னர் அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறந்தவரிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, அவர் COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது கொரோனா காரணமாக நாட்டின் முதல் மரணமா அல்லது மாரடைப்பால் ஏற்பட்ட மரணமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பிடம் மறுஆய்வு செய்வதாக குவைத் தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
source : Arab Times