குவைத் இந்திய தூதரகம் ஆன்லைன் Open House நடக்க இருக்கும் தேதி அறிவிப்பு…

Indian embassy open house
Photo Credit : TimesKuwait

குவைத் இந்திய தூதரகம் நவம்பர் 25 ஆம் தேதி ஆன்லைனில் Open House சந்திப்பை தொடங்க உள்ளது.

குவைத்தில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட Open House சந்திப்பு நவம்பர் 25 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

மேலும், இது ஆன்லைனில் நடைபெறும் என்றும், இதில் தூதர் சிபி ஜார்ஜ் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்வு கடந்த ஆகஸ்ட் மாதம் சிபி ஜார்ஜ் புதிய இந்திய தூதராக பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.

ஆனால், இந்த வைரஸ் பரவல் காரணமாக செப்டம்பர் மாதம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து வருகிற நவம்பர் 25 அன்று Open House ஆன்லைனில் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 25 ஆம் தேதி நிகழ்ச்சியில் தலைப்பு Embassy Registration Drive & அம்னெஸ்டி (தூதரகம் பதிவு இயக்கி மற்றும் பொது மன்னிப்பு) என்பதாகும்.

குவைத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயரிலான பாஸ்போர்ட், பாஸ்போர்ட் எண், சிவில் ஐடி எண், தொடர்பு எண், குவைத்தில் உள்ள உங்கள் முகவரி, மற்றும் திறந்த இல்லத்தில் உயர்த்த விரும்பும் விஷயம் ஆகியவை மின்னஞ்சல் முகவரி Kuwait@mea.gov.in க்கு அனுப்ப வேண்டும்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கும் Meeting ID மற்றும் பிற விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter