குவைத்தில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட ஆசியாவை சேர்ந்த நபரை நிதி தகராறில் கொன்றதாக இந்தியர் ஒப்புக்கொண்டார்..!!

Indian admits killing Asian over financial dispute. (photo : TimesKuwait)

குவைத்தில் சுதந்திர மண்டல (free zone) பகுதியில் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத ஆசியாவை சேர்ந்த நபரின் கொலை வழக்கில் சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், இந்தியவை சேர்ந்த சந்தேகநபர் நிதி தகராறில் அந்த நபரைக் கொன்றதாக ஒப்புக் கொண்டார், ஏனெனில் பாதிக்கப்பட்டவர் 1,000க்கும் மேற்பட்ட தினார்களைக் கடனாகக் பெற்றுள்ளார், மேலும் திருப்பிச் செலுத்தும் தேதியைத் தள்ளி வைத்துக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரை இரும்புக் குழாயால் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தலையில் தாக்கியதாக ஒப்புக்கொண்டார், குற்றவியல் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் (CID) கொலை ஆயுதத்தை மீட்டுள்ளனர். சந்தேக நபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.