குவைத்திலிருந்து இந்தியாவிற்கு திரும்ப விரும்பும் குவைத்தில் வசிக்கும் இந்திய வெளிநாட்டினருக்கு வசதியாக ஆகஸ்ட் 10 முதல் அக்டோபர் 24 வரை விமானங்களை இயக்க அனுமதிப்பது குறித்து இந்திய அதிகாரிகள் குவைத் பிரதிநிதியுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத் மற்றும் இந்தியாவிற்கு இடையில் தற்காலிக விமான சேவை விரைவில்..!!
மேலும், குவைத் மற்றும் இந்தியா என இரு நாடுகளுக்கிடையில் முன்மொழியப்பட்ட விமானங்களை ஏற்பாடு செய்ய சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் ஒப்புக் கொண்டதாக ஆதாரம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால், குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு புறப்படும் விமானங்களில் ஒரு நாளைக்கு சுமார் 1,000 பயணிகளுக்கு அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பெய்ரூட் துறைமுக குண்டுவெடிப்பு : லெபனானுக்கு அவசர மருத்துவ தேவைகளை வழங்க குவைத் முடிவு…!!
இதில் உள்நாட்டு விமானங்களுக்கான பயணிகளுக்கு 500 பயணிகள் மற்றும் இந்திய விமானங்களுக்கு 500 பயணிகள் என பிரிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட 31 நாடுகளில் இருந்து குவைத்துக்கு வெளிநாட்டவர்களைத் தடுக்கும் முடிவு இன்னும் நடைமுறையில் உள்ளது என்பதை அந்த வட்டாரம் உறுதிப்படுத்தியது.
இதையும் படிங்க : குவைத்தில் COVID-19 சோதனை மாதிரிகளை சேகரிக்கும் போலி குழு; ஜாக்கிரதை..!!
மேலும், இந்திய தரப்புடன் முன்மொழியப்பட்ட ஏற்பாடுகள் புறப்படுவதற்கு மட்டுமே என்றும், வருகையை உள்ளடக்குவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms