COVID-19; குவைத்திற்கு நன்றி தெரிவித்த இத்தாலிய வெளியுறவு மந்திரி..!!

Italian Foreign Minister Luigi Di Maio.

கொரோனா வைரஸை (COVID-19) எதிர்த்துப் போராடுவதற்கு ஆதரவளித்ததற்காக குவைத்திற்கு இத்தாலிய வெளியுறவு மந்திரி Luigi Di Maio அவர்கள் சனிக்கிழமை (04.04.2020) நன்றி தெரிவித்துள்ளார்.

குவைத் வெளியுறவு மந்திரி ஷேக் Dr. அஹ்மத் நாசர் அல்-முகமது அல்-சபாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தபோது அமைச்சர் Luigi Di Maio அவர்கள் குவைத்தின் உதவிக்கு பாராட்டு தெரிவித்ததாக இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடையாக 60M USD குவைத் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

source : Arab Times