குவைத்தில் ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் ஃபர்வானியா பகுதியின் தனிமைப்படுத்தலை ரத்து செய்ய அமைச்சர்கள் சபை முடிவு செய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செவ்வாய்க்கிழமை 28 முதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான மூன்றாம் கட்டத்தை தொடங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பகுதி நேர ஊரடங்கு உத்தரவின் நேரம் ஜூலை 28 முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசீர்வதிக்கப்பட்ட ஈத் அல்-ஆதா (பக்ரீத்) விடுமுறைக்கு பின்னர் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுகளை மறுஆய்வு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms