குவைத்தில் கடந்த 24 மணி (20.04.2020) நேரத்தில் மேலும் 80 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,995ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை சேர்த்த 55 வயதுடைய ஒருவரும் மற்றும் பங்களாதேஷை சேர்த்த 49 வயதுடைய ஒருவரும் கொரோனா வைரஸால் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை மொத்தமாக 367 பேர் குணமாகியுள்ளதாகவும் மற்ற 1,619 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் மற்றும் 9 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.