குவைத்தில் கடந்த 24 மணி (03.05.2020) நேரத்தில் மேலும் 364 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4,983ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை சேர்ந்த 63 மற்றும் 43 வயதுடையவரும், பாகிஸ்தானை சேர்ந்த 61 வயதுடையவரும், பங்களாதேஷை சேர்ந்த 46 வயதுடையவரும் மற்றும் ஜோர்டானை சேர்ந்த 54 வயதுடையவரும் ஆகிய 5 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸால் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை, குவைத்தில் மொத்தமாக 1,776 பேர் குணமாகியுள்ளதாகவும் மற்ற 3,169 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் மற்றும் 38 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.