குவைத்தில் கடந்த 24 மணி (29.04.2020) நேரத்தில் மேலும் 300 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,740ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 57 வயதுடைய நபர் கடந்த 24 மணி நேரத்தில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை, குவைத்தில் மொத்தமாக 1,389 பேர் குணமாகியுள்ளதாகவும் மற்ற 2,327 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் மற்றும் 24 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.