COVID-19; குவைத்தில் இன்றைய (22.04.2020) நிலவரப்படி 2 பேர் மரணம் மற்றும் புதிதாக 168 பேர் பாதிப்பு..!!

covid-19; new 168 cases detected in kuwait.

குவைத்தில் கடந்த 24 மணி (22.04.2020) நேரத்தில் மேலும் 168 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,248ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை சேர்ந்த 75 வயதுடையவரும் மற்றும் 57 வயதுடையவரும் கொரோனா வைரஸால் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை, குவைத்தில் மொத்தமாக 443 பேர் குணமாகியுள்ளதாகவும் மற்ற 1,792 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் மற்றும் 13 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.