இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்களின் சோகமான மறைவுக்கு நேற்று (செப்டம்பர் 3) வியாழக்கிழமை அன்று பிற்பகல் இந்திய தூதரக ஆடிட்டோரியத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் இந்திய தூதர் ஹெச்.இ.சிபி ஜார்ஜ் அவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்களின் இரங்கல் செய்தியை வாசித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில் அனைத்து COVID-19 நெறிமுறைகளையும் பின்பற்றி சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்றும், இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் மறைந்த பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!
முன்னதாக, குவைத் மாநில வெளியுறவுத் துறை அமைச்சர் காலித் சுலைமான் அல்-ஜரல்லா அவர்கள் பாரத் ரத்னா பிரணாப் முகர்ஜி அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க இந்தியா மாளிகைக்கு வருகை செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகம் தனது இணையதளத்தில் ஒரு டிஜிட்டல் இரங்கல் புத்தகத்தையும் திறந்து வைத்தது, இதில் பொதுமக்கள் தங்கள் இரங்கலை பதிவு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுருந்தது.
இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் நாட்டின் மிகவும் போற்றப்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 31 திங்கள் அன்று காலமானார், அவருக்கு 84 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில துக்கத்தின் ஒரு பகுதியாக, இந்திய தூதரகம் இந்திய பொறியாளர்கள் மீதான ஓபன் ஹவுஸ் கூட்டத்தை செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு ஒத்திவைத்துள்ளதாக தூதரகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms