ஆன்டிபாடிகள் (Antibodies) கொண்ட இரத்தப் பிளாஸ்மா ஊசி கொரோனா வைரஸிலிருந்து விடுபடவும், உடலில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், வைரஸிலிருந்து குணமடையும் வாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவுகிறது என்று இரத்த நோய்களுக்கான ஆலோசகர் Dr. Fawzia Al-Khaldi அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த இரத்தப் பிளாஸ்மா சிகிச்சையானது கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இரத்த பிளாஸ்மாவைப் பயன்படுத்துவது குறித்த சீன மற்றும் இத்தாலிய பரிசோதனைகளின் ஆரம்ப முடிவுகள் நம்பிக்கைத் தரும் விதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய ஆய்வுகளின்படி, வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகளில் பிளாஸ்மா சிகிச்சைப் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாச மறுமலர்ச்சியைச் சார்ந்திருக்கும் கால அளவைக் குறைப்பதற்கும், இறப்பு விகிதங்களைக் குறைப்பதற்கும், குணமடையும் விகிதங்களை அதிகரிப்பதற்கும் பிளாஸ்மா சிகிச்சைப் பங்களிக்கிறது என்பதை Dr. Fawzia Al-Khaldi தெரிவித்தார்.
மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையில் பிளாஸ்மாவைச் சேர்ப்பது மிகவும் நன்மைப் பயக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வைரஸிலிருந்து குணமடைந்த ஒருவரின் இரத்தத்திலிருந்து 600mm பிளாஸ்மாவைப் பிரித்தெடுக்க முடியும் என்றும், மூன்று நோயாளிகள் இந்த அளவிலிருந்து பயனடையலாம் என்றும் Dr. Fawzia Al-Khaldi தெரிவித்துள்ளார்.
source : Arab Times