குவைத்தில் தீவிரவாத சித்தாந்தத்தை பின்பற்றியதாக 3 பேர் கைது

arrested extremist ideology

ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்ததாகவும், தீவிரவாத சித்தாந்தத்தை பின்பற்றியதாகவும் மூன்று இளைஞர்கள் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவைத் செய்தித்தாள் Al Qabasஇன் படி, 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறார்களையும், மற்றொரு வயதுவந்த நபரையும் உள்துறை அமைச்சகம் கைது செய்துள்ளது.

குவைத்-இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் 60வது ஆண்டு விழா!

அவர்கள் உரிமம் பெறாத ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்தனர் என்றும், மேலும் தீவிரவாத சித்தாந்தத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோதமானவர்களைத் தேடி விசாரித்த பின்னர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் சமூக ஊடக தளங்கள் மூலம் ஒருவரை சந்தித்ததாக ஒப்புக் கொண்டார் என்றும், அவர்களுக்கிடையேயான கலந்துரையாடல்கள் ஒரே கருத்தியலைக் கொண்டுள்ளன என்பதை அறிய வழிவகுத்ததாகவும் அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter