குவைத்தில் வேலை செய்து வந்த இந்தியாவைச் சேர்ந்த கேரளா மாநிலம் திருவல்லா பகுதியைச் சேர்ந்தவர் ஆனி மேத்யூ (54), இவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு Jabir மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் குவைத்திலுள்ள Jabiria ரத்த வங்கியில் செவிலியராக பணிபுரிந்து வந்தார் எனவும், அவர் கடந்த பிப்ரவரி 27 அன்று தாயகத்திலிருந்து குவைத் வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இவர் குடும்பத்துடன் Abbasiya பகுதியில் வசித்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
COVID-19 நெறிமுறைகளின் அடிப்படையில் இவரது உடல் குவைத்தில் அடக்கம் செய்யப்படும் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த செய்தியை குவைத் தினசரி நாளிதழ்கள் பல செய்தியாக வெளியிட்டு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளது.