குவைத்தில் இந்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு இந்திய வெளிநாட்டவர் குவைத்தின் ஜிலீப் அல்-ஷுயுக் பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு நபர்களுக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் ஜிலீப் பகுதியில் உள்ள இடத்திற்கு விரைவாக விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!
அங்கு சென்ற பொது குளியலறையில் ஒரு துண்டு துணியால் கட்டப்பட்டு ஒரு உடல் தொங்கிக் கொண்டிருந்ததை அவர்கள் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
பின்னர், அவர் இந்தியாவை சேர்ந்தவர் என்றும், குவைத்தில் உள்ள தனது அறையின் குளியலறையில் தூக்கிட்டு இருதுளார் என்றும், இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!
குவைத்தில் நேற்று (ஆகஸ்ட் 27) பதிவு செய்யப்பட்ட இரண்டாவது தற்கொலை வழக்கு இதுவாகும், இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ் சேர்ந்த ஒருவர் கம்பியால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டு ஐந்தாவது மாடியில் இருந்து குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms