COVID-19; குவைத்தில் கொரோனா வைரஸால் இந்திய மருத்துவர் மரணம்..!!

An Indian Doctor died to coronavirus in kuwait. (photo : IIK)

குவைத்தில் கொரோனா நோய்தொற்று காரணமாக ஜாபர் மருத்துவமனையில் சிக்கிசையிலிருந்த இந்திய மருத்துவர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவரான வாசுதேவ் ராவ், பல் மருத்துவ துறையில் சிறந்த அனுபவம் உடையவர் மற்றும் இவர் மருத்துவத் துறை கூட்டமைப்பின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் குவைத் அரசின் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் என்றும், கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையிலிருந்த நிலையில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.